மதுரை மாவட்டம் பாலமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன்
ஸ்ரீ மாரியம்மன் கோவில் 33வது ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு பக்தர் விஜயகுமார் தனது வீட்டில் அமைந்துள்ள கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து மாலை அணிவித்து தேங்காய் பழம் உள்ளிட்டவைகள் படைத்து சிறப்பு பூஜைகள் செய்து அருள் இறங்கி அக்கினி சட்டி எடுத்தார்.
பின்னர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு சென்று தனது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்.
இதில் பக்தர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தனது வீட்டில் அன்னதானமும் வழங்கினார்