திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராமலிங்கம்,காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்டத் தலைவர் குலாம் மைதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா,மதிமுக ஒன்றிய செயலாளர் பிரதாப், மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் ரஹமத் அலி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. தற்போது 22க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்துக்கு பிரதமர் அடிக்கடி வருவது அச்சத்தின் வெளிப்பாடு. தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் இந்தியா கூட்டணியில் தேர்தல் அலுவலகத்தை வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன்,திமுக ஒன்றிய பிரதிநிதி எஸ். ஆர். ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பாளர் வை. செல்வராஜ் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *