மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அஞ்சல் அலுவலர் திருமதி.நாகஜோதி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.தவனாதன் உள்ளிட்ட அஞ்சலகப்பணியாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி “அனைவரும் மனசாட்சிப்படி வாக்களிப்போம்”என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அனைவருக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி நகராட்சி பணியாளர்கள் ஜெயராமன்,இராமு , கணேஷ், ஆகியோர் 💯% வாக்களிக்க கேட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.