பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தர்மபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பரப்புரை
எதிர் வருகின்ற தர்மபுரி நாடாளுமன்ற பொது தேர்தலில் நான்குமுனையாக அரசியல் கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் நாள் மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் சூறாவளி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த வகையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக சார்பில் வழக்கறிஞர் அ மணி என்பவரை வேட்பாளராக அறிவித்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தங்களுடைய வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு திறந்த வேனில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளான ஆலாபுரம், பூதநத்தம், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரபிரச்சாரம் செய்தார் இந்தப் பிரச்சார நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பிஎஸ் சரவணன் உடன் இருந்தார் மேலும் ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தல் பரப்புரையில் உடன் இருந்தனர்