ராயபுரம் என்.ஆர்.டி. மேம்பாலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழரசன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. இன்று அதி காலையில் அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது கட்டு கட்டாக பணம் இருந்தது.
இது பற்றி விசாரணையில் அதே பகுதி வெஸ்ட் மாதா கோயிலை சேர்ந்த ஃபைது முகமது என்றும் இவர் சொந்தமாக இன்டர்நேஷனல் கம்பெனி வைத்து நடத்தி வருவதாகவும் அங்கிருந்து பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக கூறினார்.
ஆனால் அவர் கொண்டு வந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் 88 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.