ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் படி வாக்கு பதிவிற்கு முந்தைய 72 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீவிர கண்காணிப்பு பணிகளை குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இகா மாவட்ட வருவாய் அலுவலர் ந சுரேஷ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார் சரவணன் குணசேகரன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.