வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
போக்குவரத்து கழகத்தில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை (லிமிடெட்) திண்டுக்கல் மண்டலம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோட்டத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மண்டலத்திலுள்ள திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 15 பணிமனைகள் மற்றும் புதுப்பிக்கும் பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட திட்டமிடப்பட்டு வேடசந்தூர் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர் டி.ராஜேந்திர பிரசாத் (55448) பாராட்டி பாராட்டு சான்றிதழை உதவி மேலாளர் (வணிகம்) வழங்கினார். இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள், வேடசந்தூர் கிளைமேலாளர், போக்குவரத்துக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் கோட்ட மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் மூலம் பாராட்டுச் சான்றிதழ் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.