நாமக்கல்லில் இன்று ஆவின் நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு 82,000 லிட்டர் பால் விற்பனை நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் இன்று முதல் 3 இலட்சம் நபர்களுக்கு சென்றடையும் வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் நாள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதுபெற்ற விழிப்புணர்வு பணிகளை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு 17, 18, 19, ஏப்ரல் 2024 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
சுமார் 1.50 லட்சம் குடும்பங்களை சென்றடையும் வகையில் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

487 கிராமங்களில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்களை சென்றடையும் வகையில் அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள் ஆவின் விற்பனையகம் ஆவின் பாலகம் போன்ற இடங்களில் துண்டு பிரசுதங்களாகவும் ஓட்டு வில்லைகளாகவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த விழிப்புணர்வு பணிகளில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்‌

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *