துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சர்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்

மேலும் துவரங்குறிச்சி கடைவீதி பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை, தீ விபத்தை தவிர்ப்பது, தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைத்து கட்டுப்படுத்துவது, தீயை எளிதாக அனைக்கும் வழிமுறைகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *