தரங்கம்பாடி செய்தியாளர்.இரா.மோகன்
பொறையார் காவல்துறையினர் சார்பில் திருக்கடையூரில் கொடி அணிவகுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொறையார் போலீசார் சார்பில் இன்று அணிவகுப்பு நடைபெற்றது.
ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் பொறையார் காவல் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருக்கடையூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேண்டு வாத்தியங்கள் முழக்கத்துடன் ஆரம்பித்த கொடி அணிவகுப்பு பிரதான சாலையில், கடைவீதி வழியே சென்று முடிவடைந்தது.