பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கீழவழுத்தூர், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அழகுகாவடி எடுத்தும் பக்தர்கள் கையில் குழந்தையுடனும் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மேலவழுத்தூர் வெள்ளாளர் தெரு கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர்.