சென்னை வடபழனியில் ஓட்டல் ஒன்றில் இரண்டு கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து விபத்து கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் பார்வதி (64). இவர் அதே பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக அம்மாச்சி குழம்பு கடை என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலை இன்று காலை ஓட்டல் ஊழிய சரவணன் என்பவர் சமையல் அறையில் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனே அங்கிருந்து அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.. பின்னர் தீயானது ஹோட்டல் முழுதும் பரவியதை அடுத்து சமையல் அறையில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வடபழனி போலீஸார் மற்றும் அசோக் நகர், கோயம்பேடு, பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை,