கடலூர் பாராளுமன்ற தேர்தல்
கடலூர்
பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மேற்பார்வையில்,மாவட்ட காவல்துறையினர், மத்திய துணை ராணுவ படையினர் 450,ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180.கடலூர் ஊர்க்காவல் படையினர், சென்னை மாநகர காவல்துறையினர், சிறப்பு பிரிவு காவல் துறையினர், சிறைதுறையினர் தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தில் 2032 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன (லொக்கேஷன் 1263)187 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவைகளாகவும் 11 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதட்டமானவை ஆகவும் மொத்தம் 198, பதட்டமான வாக்குச்சாவடியில் காவல்துறையினர். மத்திய துணை ராணுவத்தினர் கூடுதலாக பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் பதட்டமான வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.