ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கூட்டம்” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், நடிகர் மனோகரன், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகை அங்கிதா, சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. கலைக் குழுவில் உள்ளவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை எழுத்தாளர் விவேக் ராஜ், கருங்காலக்குடி சந்துரு செய்தனர். தமிழ்நாடு மக்கள் 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என்று கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்து கொண்டார்கள்.