கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்..இதே போல மருதமலை திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்..இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார் ,தாம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளதாகவும்,அனைவரும் தங்களது உரிமையை நிலை நாட்ட வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..கோவையை பொறுத்த வரை அனைத்து மக்களும் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்..