புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியில் வந்து மை வைத்த விரலைக் காட்டி விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். புதுவை மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்.
வெற்றி வாய்ப்பு எனக்கு மிக பிரகாசமாக உள்ளது என்பதை நான் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக பார்த்துவிட்டு தான் இங்கு மடுகரைக்கு வந்திருக்கிறேன்என்று பாராளுமன்ற வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் கூறினார்