வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் ஊராட்சியில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம். ரமேஷ் தலைமையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து தர்ப்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய், மோர், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, வி. சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், மோர், பழச்சாறு மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினர். மேலும் அவ்வழியாக வந்த மினி பஸ்ஸில் பயணித்த பயனாளிகளுக்கு குளிர்பானங்கள், மோர் வழங்கி கோடை வெயிலை தணிக்கும் வகையில் கூடியிருந்த பொதுமக்களுக்கும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம். எம். மதன், மாநில கலைப்பிரிவு இணை செயலாளர் ஜெ. டில்லிபாபு, வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், ஏனாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வரதன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயபால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் L&T முருகன், ஒன்றிய வர்த்தகப்பிரிவு செயலாளர் கலையரசு மற்றும் அதிமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.