செங்குன்றம் செய்தியாளர்

புழல் காவாங்கரையில் இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த முகாமில் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் ( வயது 17 ) கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராய் அவர் தனது குழுக்களுடன் விளையாட தனது தந்தையிடம் ஷூ வாங்குவதற்காக ரூபாய் 2000 கேட்டுள்ளார் .

பெற்றோர்கள் தற்போது எங்களிடம் பணம் இல்லை பணம் வந்தவுடன் வாங்கித் தருகிறேன் எனக் கூறினார்கள்.இதனால் மனவிரக்தி அடைந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் உள்ளோர் அவரைக் காப்பாற்ற உடனே ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .

அங்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்து போனார் . இது குறித்து தகவலின் பேரில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *