வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னடார் கிராமத்தில் தீ விபத்தால் வீட்டினை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அப்போது பாதிப்புக்கள் குறித்தும் அரசின் சார்பில் செய்யப்பட்ட உதவிகள் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கு.இராசேந்திரன் கேட்டறிந்து களத்தில் உதவியாக இருப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் வேதை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயேந்திரன்,பொன்முடி, பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். பாதிப்படைந்த குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் சார்பில் இளைஞர்கள் படையாக சந்தித்து ஆறுதல் கூறியது அப்பகுதியில் பெரும் உற்சாகமாக அப்பகுதி மக்களால் பேசப்பட்டது.