வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை..
வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறையை கையாண்டனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 70 நாட்களுக்கு கிராமத்தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பதினெட்டாங்குடி கிராமத்தில் கிராம மக்களை சந்தித்து கிராமப்புற மதிப்பீட்டு அணுகுமுறையை கையாளுதல் குறித்து அக்கிராமத்தில் உள்ள மக்களை பங்கேற்கச் செய்து வேளாண்மையில் உள்ள பிரச்சனை களுக்கு தீர்வுகளாக சமூக வரைபடங்கள், வெண்படங்கள், வட்ட விளக்க படங்கள், மரம் மற்றும் இயற்கை வள வரை படங்களை வரைந்து விளக்கி கூறினர்.