தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக துறைவாரியாக தீவிர கண்காணிப்புப் பணிகள் செயல்படுத்து வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது
கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்புப் பணிகள் துறைவாரியாக செயல்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆலோசி க்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ரிச்சர்டுராஜ், துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் கோவிந்தன். மாவட்ட உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாசன். வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன். குற்றாலம் வனச்சரகர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.