எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டன. வரக்கூடிய காலங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாகவும் கட்சியினுடைய உட்கட்சி தேர்தல் சம்பந்தமாகவும் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து தொகுதிகளும் முடுக்கி விடப்பட்டன.
தொடர்ந்து இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு அதை பராமரிக்க வேண்டும் என்றும் ஆங்காங்கே நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்றும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட செயலாளர் ஆரிஃப் கான் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொகுதி துணை அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.