சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 27வது நாள் மாவட்ட தலைவர் டயர் சரவணன் சார்பில் நீர்மோர் வழங்கல்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தாலுக்கா அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு தண்ணீர் பந்தல் பங்குனி உத்திரம் திருநாள் அன்று துவங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க உறுப்பினர்கள் தினம் ஒருவராக தங்களது சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோர், வெள்ளரிக்காய் ,தர்ப்பூசணி போன்றவை வழங்கி வருகின்றனர்.

27 வது நாளான சித்ரா பௌர்ணமி (ஏப்-23) தினத்தன்று வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட தலைவர் டயர் சரவணன் சார்பில் தண்ணீர், நீர்மோர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் சங்கத் தலைவர் செயலாளர் எஸ் திருமுகம், துணைத் தலைவர் மீசை பாலு ,துணை செயலாளர் ப.கிருஷ்ணகுமார், துறையூர் தொகுதி தலைவர் என் நந்தகுமார், செயலாளர் சி.ராஜதுரை, பொருளாளர் எஸ் செந்தில்குமார், அவைத்தலைவர் பாபு மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள்,சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சுமார் தினமும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நீர்மோர் , வெள்ளரிக்காய் தர்ப்பூசணி போன்றவை வழங்கப்பட்டது.முதலாம் ஆண்டாக பங்குனி உத்திரம் திருநாள் அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து 60 நாட்கள் நீர்மோர் வழங்கப்படும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *