கீழக்கரை.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் பெரியவர்கள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகுதியின் தற்காலிக தலைவர் சீனி முகமது அவர்கள் தலைமையிலும், செயலாளர்
பீர்பகுருதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நகர் பகுதியில் மதுப்பழக்கத்தையும் மதுவையும் முற்றிலும் ஒழிக்கும் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நகர் பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையான அனைவரும் அந்த பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு தங்கள் குடும்ப நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் வாழ முன்வர வேண்டும். என்று மதுவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

போதை பழக்கத்தால் உடல் ரீதியாகவும் குடும்பங்களிலும் ஏற்படும் பாதிப்புகளையும் தீமைகளையும் விளக்கி கூறி விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
இதை கண்ட அந்த பகுதியில் வாழும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் குடும்பப் பெண்களும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் இளைஞர்கள் கூறுகையில் ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து நகரின் அனைத்து பகுதிகளிலும் நடத்துவோம் முற்றிலும் மது இல்லா ஊரையும் இளைஞர்களையும் உருவாக்குவோம் என்று உறுதி ஏற்று கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *