பாலக்கோடு போல பகுத்தனஅள்ளி கிராமத்தில் குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை.
பாலக்கோடு-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போல பகுத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் 45 வயது இவரது மனைவி கற்பகம் இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள். 14 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
குப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்தார்.
இதனால் வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் பிரச்சினையால் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி கற்பகம் இனி மது குடிக்க வேண்டாம் மது குடிப்பதை கைவிடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த குப்பன் நேற்று விவசாய பயிருக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடனே பாலக்கோடு அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி குப்பன் உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.