அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்

தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட கழக பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் எம் சுகுமார் பல இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மேல்விஷாரம் மேற்கு பகுதி நகர கழக செயலாளர் ஏ. இப்ராஹிம் கலிலுல்லா கழகப் பொறுப்பாளர்களின் ஆதரவோடு தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் எம் சுகுமார் நீர் மோர் பந்தலை திறந்து பொது மக்களின் தாகத்தை தனிக்கும் வகையில் பழ வகைகள் நீர் மோர் குளிர்பானங்கள் வழங்கினார் இந்த நிகழ்வில் மேல்விஷாரம் நகர கழக பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *