மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல்-2024 முடிவுற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
மேலும் அங்கு பணியில் உள்ள காவலர்களிடம் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.