தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது.
செங்கோட்டை நூலகத்தில் வைத்து 4/5/24 சனிக்கிழமை அன்று இலவச குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது தென்காசி வெற்றிஅகாடமியின் உதவியோடு நடைபெற்ற இந்த தேர்வில் 75 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற வாசகர் வட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள குரூப்4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஐந்து வாரங்கள் சனி ஞாயிறு இரண்டு தினங்களும் மாதிரி தேர்வு நடைபெறும்.
சனிக்கிழமை தோறும் தென்காசி வெற்றி அகாடமி உதவியுடன் நடைபெறும்
ஞாயிற்றுக்கிழமை தோறும் தென்காசி ஆகாஷ் அகாடமி உதவியுடன் நடைபெறும்
தேர்வுகள் அனைத்தும் காலை 10:00 மணி முதல் பகல் 1மணி வரை நடைபெறும்.தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாள்கள் திருத்தி கொடுக்கப்படும்
தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறோம் மேலும் விவரங்களுக்கு 9486984369 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செங்கோட்டை அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டை விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.