கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு குறித்து சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர்.

நகராட்சி ஆணையரும் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கடையை அகற்ற முடியாத சூழ்நிலை இருந்தது.

அதற்குள்ளாக அதிகாரம் படைத்தவர்கள் ஆக்கிரமிப்பினை அகற்ற முட்டுக்கட்டை போட்டது மட்டுமின்றி, ஆணையரை புகார் கொடுக்க வைத்து மிரட்டி பார்த்தனர். மேலும் ஜனநாயக முறையில் முறையிட்டார்கள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர்.

இப்பிரச்சினை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடை அகற்றப்பட்டுள்ளது..

நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், ஜனநாயக முறையில் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்ற சமூக ஆர்வலர்களுக்கு நன்றி..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *