இன்று 27.04.2024 இராணிப்பேட்டை மாவட்ட காவல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி , இ.கா.ப., தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிலுவையுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து மேற்கொள்ள பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் அதிக அளவில் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் (தலைமையிடம்), குணசேகரன் (CWC) குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்), சீராளன் (DCRB), வெங்கட கிருஷ்ணன் (CWC), செல்வி. சந்திரலேகா (பயிற்சி) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.