வலங்கைமான் அருகே உள்ள சாரநத்தம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் வடக்கு காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் கடந்த சில நாட்களாக பழுதாகி உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்துவலங்கைமான் ஒன்றிய மாத சங்கத்தின் தலைமையில், சாரநத்தம் பகுதி மக்கள் ஒன்று திரண்டு குடிநீர் வழங்க வேண்டி காலிபிளாஸ்டிக் குடத்துடன் பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு, உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேருந்து முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலுவலர்கள் மற்றும் வலங்கைமான் காவல் ஆய்வாளர், போராட்டக்காரர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், தற்காலிகமாக சாரநத்தம் தெற்கு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து உடனடியாக குடிநீர் வழங்குவது.

ஒரு வார காலத்துக்குள் மேல்நிலை நீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டாரை ரிப்பேரை சீர் செய்து நிரந்தர தீர்வு காணுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் இளங்கோவன், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் விஜய், கட்சியின் கிளை செயலாளர் ரகுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *