மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முதன்மை செயலாளர் பாவரசு, துணை பொது செயலாளர் ஆற்றலரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தை புதுப்பித்து வெங்கலத்தில் பெயர் பலகை அமைக்க வேண்டும். அலங்காநல்லூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும். முனியாண்டி கோவில் பின்பாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.