செங்குன்றத்தில் டீக்கடையின் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..
செங்குன்றம் பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் தெருவில் பாலவாயிலை சேர்ந்த உதயகுமார் ( வயது 56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் முத்து என்பவர் உதவியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் பத்தரை மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்கள். மறுபடியும் இன்று அதிகாலை 3 மணி அளவில் முத்து கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டரின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று போய் பார்த்ததில் கல்லாவில் இருந்த பணம் 12 .500 ஆயிரம் பணமும் சிகரெட், பிஸ்கட் போன்ற பொருட்களும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது . இச்சம்பவம் பற்றி உதயகுமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
புகாரை பெற்றுக் கொண்ட செங்குன்றம் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.