தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் வைத்தியலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளியில்
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா அவரது
18 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி ஆலடி அருணா அறக்கட்டளை, ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு
கன்னியாகுமரி மண்டல தலைவரும் தென்காசி மாவட்ட தலைவருமான டிபிவி. வைகுண்ட ராஜா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ வி என் கலைவாணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆலடி அருணா அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த முகாமில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பா, நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சன், ஊராட்சித் தலைவர்கள் ரவணசமுத்திரம் உசேன், பாப்பான்குளம் முருகன் திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரி சுப்பு, மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், இளைஞர் அணி சிவகுமார், முன்னாள் துணைச் செயலாளர் மதியழகன், மாஞ்சோலை துரை, முன்னாள் அவை தலைவர் தங்கபாண்டியன், கிளைச் செயலாளர் முத்துக்குட்டி முன்னாள் வியாபாரிகள் சங்கம் தலைவர் தங்கப்பழம், அத்தியூத்து செயலாளர் செல்லக் காளி, காளத்தி மடம் முத்து செல்வம், வடிவேல் முருகன், கடங்கநேரி செயலாளர் துரைராஜ் பாண்டியன், ஆழ்வை ஒன்றிய பிரதிநிதி கோதர் ஷா அலி, பொட்டல்புதூர் ஜமாத் உறுப்பினர் விசுவாசம், காங்.மாநில இலக்கிய அணிதுணைத்தலைவர் ஆலடி சங்கரய்யா , வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், திமுக நல்லூர் கிளைச் செயலாளர் அருணாசலம் ,சுந்தர்ராஜ், கண்ணன், கமலக்கண்ணன், தங்கராஜ், கருப்பசாமி, பெரியசாமி, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலடி அருணா செவிலியர் கல்லூரி மற்றும்ரஞ்சித், பஞ்சு அருணாசலம், ஜெபராஜன் மணிகண்டன் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *