போச்சம்பள்ளி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் ஏழு நாட்கள் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் யோக பயிற்சி, சித்த மருத்துவர் தனலட்சுமி அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணுதல் குறித்து சிறப்புரை,உயர் கல்வி வழிகாட்டி குறித்து முத்துகுமார் அவர்கள் மாணவிகளுக்கு வழிகாட்டினார் மற்றும் பள்ளி வளாக தூய்மைப் பணி நடைப்பெற்றது.நிறைவு நாளில் பள்ளியின் தலைமையாசிரியர் செ.காந்திமதி ,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் க.அம்சவள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காளியம்மாள், கல்யாணி .சிவா என்கின்ற.சிவலிங்கம் பழனி,மற்றும் உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்..பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக சிறப்பாக செயலாற்றிய மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது …