ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டபத்தில் ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர்களின் சிலைகளுக்கு முதல்வர் மலர் தூவிமரியாதை செலுத்தினார்.