புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளர் மறைந்த பெரியவர் ஆர்.வீ. ஜானகிராமன் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், கழக துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், குமார் என்கிற கிருஷ்ணன்,செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, கழக பொருளாளர் கே.எம்.பி. லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் எஸ். கோபால், வி. கார்த்திகேயன், முகிலன், சன். சண்முகம், ப. வடிவேல், கோபாலகிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், கலந்து கொண்டனர்.
மேலும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அ. தைரியநாதன், பூ.சு. இளங்கோவன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, கோகுல், பழநி, பிரபாகரன், சத்யாஆறுமுகம், குப்புசாமி, ரவீந்திரன், பாஸ்கர், தொகுதி செயலாளர்கள் இராமசாமி, சக்திவேல், தியாகராஜன், நடராஜன், சிவக்குமார், சவுரிராஜன், திராவிடமணி, சக்திவேல், சீத்தாராமன், செல்வ. பார்த்திபன், தங்கவேலு, ரவிச்சந்திரன், பாண்டு அரிகிருஷ்ணன், மதிவாணன், கலைவாணன், வெங்கடாசலபதி, கலிய கார்த்திகேயன், சாரங்கன், ராஜாராமன், அணிகளின் அமைப்பாளர்கள் மணிமாறன், சோமசுந்தரம், இளஞ்செழியப்பாண்டியன், மதனா, வீரய்யன், காயத்ரி ஸ்ரீகாந்த், நர்கீஸ், வடிவுக்கரசி, தேன்மொழி, விக்டோரியா, லோககணேசன், எம்.எஸ். ராஜா, பழநிசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டுராசன், செல்வநாதன், ருக்மாநந்தன், ராமகிருஷ்ணன், மதி, கோதண்டபாணி, அண்ணா அடைக்கலம், அகஸ்டின் சித்து, அருண்குமார், தாமோ. தமிழரசன் மற்றும் மாநில கழக துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள்பங்கேற்று பெரியவர் ஜானகிராமன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.