சென்னை கொளத்தூர் செய்தியாளர்
அகமது அலி

சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதியில் 15 வது வட்டம் மணலி புது நகரில் திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டம் நடைபெற்றது

மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் புழல் எம் நாராயணன் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் கே அங்குசாமி தலைமை தாங்கினார்.

15 ஆவது வட்ட கவுன்சிலர் நந்தினி சண்முகம் பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் ஆர் முரளி சே செல்வன் கே சிவசங்கரன் நான் மோகன் குமார் நாகூர் ஆர் பா சந்திரன் கவுன்சிலர் கா காசிநாதன் வி கார்த்திகேயன் ராஜேந்திரன் ரவிச்சந்திரன் பக்தவச்சலம் மனோகரன் கண்ணன் பாலாஜி எல்லமுத்து வசிமுகமது பாஸ்கர் கோபாலகிருஷ்ணன் வழக்கறிஞர் சண்முகம் புஷ்பராஜ் தசரதன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக சொற்பொழிவாளர் தக்கோலம் தேவபாலன் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்

கூட்டத்தில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளை புழல் எம் நாராயணன் வழங்கினார்

மாதவரம் வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம் என் அஜய் தென்னவன் துவக்கத்தில் வரவேற்றார் இறுதியாக ஏ.விஜயன் அண்ணன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *