புதுச்சேரி, அரசு பள்ளி மொழியாசிரியர் பூரணாங்குட்பம் பு.மதியழகன் அவர்கள் எழுதிய நெஞ்சமே (புதுக்கவிதை) கருணையே தெய்வம் (சிறுகதை ) ஆகிய 2 – நூல் அறிமுக விழா பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.
நூலை புதுவை சபாநாயகர் R. செல்வம் அவர்கள் வெளியிட நூல் அய்வு செய்த தமிழ் மாமணி சு.வேல்முருகன், தாகூர் கல்லூரி பேராசிரியை விஜயராணி, கலைமாமணி பேராசிரியர் .அரங்க.முருகையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் திருவேங்கடம் (Ex. பஞ்சாயத்து து. தலைவர்) வரவற்புரையில், எழில்ராசா (தலைவர் அறங்காவல் குழு) முன்னிலையில், பிரமிட் விஞ்ஞானி திரு.வரதராஜன், பனை பாதுகாவலர் பூரணாங்குப்பம் ஆனந்தன், ஆசிரியர் பூங்குன்றன், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள், நூல் ஆசிரியர் மதியழகன் ஏற்புரை செய்தார். நன்றியுரை ஆசிரியர் குணசுந்தரி நடராஜன் கூறினார்கள்.