திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். ஈரோட்டில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரோடு திருநகர் காலனியில் ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து பேசிய போது அருந்ததியர் சமூக மக்கள் தூய்மை பணி செய்பவர்கள் என்றும் ஆந்திராவில் இருந்து வந்த அந்தேயிகள் என்று பேசிய நடிகர் சீமான் மீது.கடந்த16ம்தேதி அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்.மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அதன் அடிப்படையில் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கிச்சன் மாநில மகளிரணி செயலாளர் தலித் நதியா. இவர்களது தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட அமைப்பாளர் பாண்டியன். தமிழ் புலிகள் கட்சி வடக்கு மண்டல துணைச் செயலாளர் புலிபழனி. அருந்ததியர் மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் குருவை குமார். அமைப்பின் நிறுவனர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என அனைவரும்.உடன் இருந்தனர்.