நெல்லை மாவட்டம் நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜயநாரா யணத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 45), ஆண்டான்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), என்பதும், தப்பி ஓடியது புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பதும், 3 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *