மூத்த புகைப்பட கலைஞர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் பாரதி,நிறுவனர் மனோகர்,செய்தி தொடர்பாளர் ஹிதாஸ் கூட்டாக விடுத்துள்ள இரங்கல் செய்தி
தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் ஸ்ரீனிவாசன் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் காலமானார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் குழுமத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.