இரா.மோகன் செய்தியாளர்.தரங்கம்பாடி
தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் உடைந்த நிலையில் புத்தர் சிலையுடன் மிதந்து வந்த தெப்பம். மீனவர்கள் தெப்பத்தை கடற்கரைக்கு இழுத்து வந்தனர். கடலோர காவல் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாலை கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மரத்தினால் செய்யப்பட்ட தெப்பம் சிதைந்த நிலையில் அதில் சிறிய புத்தர் சிலை ஒன்றும் இருந்தது. மிதந்து வந்த தெப்பத்தை கையிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்து உப்பனாற்றில் கட்டி வைத்தனர். கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த தெப்பத்தை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.
வெளிநாடுகளில் தெப்பம் செய்து கடலில் விழா கொண்டாடும் போது திசை மாறி இப்பகுதிக்கு வந்ததா? எனவும் இந்த தெப்பம் எந்த நாட்டை சேர்ந்தது என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வெளிநாட்டு தெப்பம் கரை ஒதுங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.