கு.ஜெயபாலன் செய்தியாளர்,திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகேசிவனார்தாங்கல் கிராமத்தில் சுடுகாடு பாதையில்லாததால் வயல்வெளியில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார் தாங்கல் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லாததால் சடலத்தை விவசாய நிலங்கள் நடுவே தூக்கி செல்லும் அவல நிலை, பலமுறை பொது மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.