செய்தியாளர் பாலக்கோடு
மாரண்டஹள்ளியில் 13.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.பூமி பூஜை செய்துவைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்டஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு போயர் தெருவில் 13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
உடன் மாரண்டஹள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்தரகனி. ஒப்பந்ததாரர் கோவிந்தன். தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால். வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்.மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன்.மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.