காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காரைக்கால் காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 8 பேருக்கு கொரோனா காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லையென்றாலும், மாவட்ட நல வழித்துறை சார்பில், தினசரி கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பரி சோதனை செய்யும் போது, நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் காரைக்காலை அடுத்த பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கை இதனை தொடர்ந்து மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கல்லூரியில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உள்ள மாணவர்கள் மீண்டும் முககசவம், சமூக இடைவெளியை பின்பற்ற நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.