தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், செவித்திறன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

தருமபுரி – ஜூன் 23

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி நகரம் தேர் நிலையம் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ராஜ் தலைமையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், பேனாக்கள், பென்சில்கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி ஆகியவைகளை வழங்கினார்கள்.

ரோட்டரி விவேகானந்தா செவித்திறன் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இதில் இளைஞர் அணி இணை அமைப்பாளர் கோபி, முருகன், வினோத், ரமேஷ், திருப்பதி, மைல்ஸ், பரத், விஷ்வா,ரம்யா தேவி, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், நாகராஜ், அருள், கோவிந்தராஜ், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *