ஸ்ரீனிவாசன்
செய்தியாளர்
திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமை தாங்கினார். பல நிறுவனங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர் முனைவர் செ.சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோ. தண்டபாணி வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை கல்லூரி வேலை வாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. வெற்றிச்செல்வம் ஒருங்கிணைத்தார்.