வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரோல்பால் உலககோப்பை போட்டி வருகின்ற ஏப்ரல் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, ராஜன் உள்விளையாட்டு அரங்கு மாணவர்களான பிரதீப் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்று மாஸ்டர் பிரேம்நாத் மற்றும் குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.