வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காளிமுத்து என்பவரை அனைத்து பழனி மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று ஏப்ரல் -5 வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரண், காளிமுத்துக்கு 6 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.